எதில் தொலைகிறதோ இந்த மனது
May 7, 2010
muhiloosai kavioosai
கட்டு பாடுகள் அற்ற மனது
கவலைகள் அற்ற வயது
விடியாத பொழுதுகள்
விலைவாசி இல்லா கனவுகள்
எனக்கும் சிறு வயதில்…..
ஆனால் !
இப்போதெல்லாம்
உழைத்து கழைத்ததைவிட
உறங்காமல் தவிப்பதே அதிகம் !
முகம்
தெரியாத
ஒருவன் பின்னே
ஓடுதே மனது….
இப்படிதான்
தனிமை என் இளமையை
கொன்று வாழ்வது போல் உணர்வு ….
பசித்த பொது
பிடிக்காத உணவு
நாடு ராத்திரியில்
நடந்து கொண்டே கனவு…..
தேநீர் குவளையில்
விடியும் பொழுது….
தனிமையான
மாலை நேரம்
மிதமான
இளையராஜா பாடல்
ஒரு குவளை தேநீர்….
எவ்வளவோ ஆசைகளோடு
உன்னை பற்றிய நினைவு
எப்படி இருப்பாய் !
எப்போது வருவாய் !
நாம் என்கு எப்படி சந்திப்போம் !
இப்படியே கலர் கலர் கனவுகள்…..
கொஞ்சம்
கொடுமையான தனிமை
அதில் கொஞ்சும் இளமை
விடிகையில் வடியும்
நினைவுகள்
குளிர் சுரமாய் கவிதைகள்….
Entry Filed under: Uncategorized
Leave a Reply
Trackback this post | Subscribe to comments via RSS Feed






