Archive for June 2010




ஒரு முறை சொல்லிவிடு அன்பே…

ஒரு முறை சொல்லிவிடு அன்பே
உன் மெளனத்தால் என்னைக் கொல்லாதே

ஓசையின்றி எனது விழிகள் ஏனோ
உன்னை எண்ணி அழுது கொண்டிருக்கிறது

ஆசைகளை சுமந்து எனது இதயம்
ஒவ்வொரு நாளும் ஏமாந்து போகிறது

நேற்று என்னை பிரிந்தவனை எண்ணி
காத்திருந்த காலங்கள் கானல்நீர் ஆனதுவோ

காற்றில் கரைந்து போய்க் கொண்டிருக்கிறது
நீ என்னுடன் பேசிய காதல் வார்த்தைகள்

காசு கொடுத்தும் கிடைக்கவில்லையே
என்னிடமிருந்து தொலைந்து போனவைகள்

உதிர்ந்திடும் கண்ணீர்த் துளிகளை தினமும்
என் விழிகளே உள் விழுங்கி விடுகிறது

காதலுக்கு மரணம் உண்டா சொல்
பின் எப்படி நம் காதல் இறந்து போனது

என் ஆறுதலை எங்கே கொண்டு சென்றாய் என் உயிர்
என்னை விட்டுப் பிரியும் முன் திருப்பிக் கொடுத்துவிடு

நீ என் மனதில் ஆறாத காயங்களாக
இன்று வேதனை தருகிறாய் எதற்காக

உன்னை நான் அளவுக்கு அதிகமாய்
நேசித்தது தானோ எனது குற்றம்

காதலென்னும் முள் கீறிய புண்களால்
என் இதயத்தில் அழியாத வடுக்களாக நீ

உன்னுள் எங்காவது நான் இருப்பேன் என்று
எண்ணி நான் தொலைந்தது தான் மிச்சம்

விழிகளில் வடியும் ஒவ்வொரு துளிகளிலும்
உன் முகம் தான் தெரிகிறது காரணம் நீ என்பதால்

அவன் நினைவின்றி வாழத் துடிக்கிறேன்
பாழாய்ப் போன மனம் மட்டும் வரமறுக்கிறதே

ஒரு இதயத்தை காயப்படுத்திய பின்பும்
உன்னால் இதயமுள்ளவனாக வாழ முடிகிறதா

காதலே நீ கலைந்து போகு முன் காதல்
என்னவென்பதை அவனுக்கு சொல்லிப் போ

திருமணம் வேண்டாம் இரு மனங்கள்
சேராத இந்த திருமணமே வேண்டாம்

ஓரு மகளாய் என் தாய் மடி சாய்ந்து என் வாழ்வின்
இன்னல்களை எண்ணி அழுது தீர்க்க விரும்புகிறேன்

Add a comment June 9, 2010

உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்….

விழி மூடி யோசிக்கையில் சித்திர‌மாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.

நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்

உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
உன்னை விட்டு பிரியும் நாள் நெருங்கி
கொண்டு இருப்பதை நினைக்கும் போதெலலாம்

வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்

என் மன‌ம் தாங்கிய சுமைகளை கண்ணீரால்
கரைத்து கொண்டு இருக்கிறேன்.
இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு…

By. Nagulan

Add a comment June 9, 2010

Calendar

June 2010
M T W T F S S
« May   Oct »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

காதல் தாகம்

Our Services

Advertisment

Watch DVD Movies Online
 
Follow

Get every new post delivered to your Inbox.