ஒரு முறை சொல்லிவிடு அன்பே…
June 9, 2010
muhiloosai kavioosai

ஒரு முறை சொல்லிவிடு அன்பே
உன் மெளனத்தால் என்னைக் கொல்லாதே
ஓசையின்றி எனது விழிகள் ஏனோ
உன்னை எண்ணி அழுது கொண்டிருக்கிறது
ஆசைகளை சுமந்து எனது இதயம்
ஒவ்வொரு நாளும் ஏமாந்து போகிறது
நேற்று என்னை பிரிந்தவனை எண்ணி
காத்திருந்த காலங்கள் கானல்நீர் ஆனதுவோ
காற்றில் கரைந்து போய்க் கொண்டிருக்கிறது
நீ என்னுடன் பேசிய காதல் வார்த்தைகள்
காசு கொடுத்தும் கிடைக்கவில்லையே
என்னிடமிருந்து தொலைந்து போனவைகள்
உதிர்ந்திடும் கண்ணீர்த் துளிகளை தினமும்
என் விழிகளே உள் விழுங்கி விடுகிறது
காதலுக்கு மரணம் உண்டா சொல்
பின் எப்படி நம் காதல் இறந்து போனது
என் ஆறுதலை எங்கே கொண்டு சென்றாய் என் உயிர்
என்னை விட்டுப் பிரியும் முன் திருப்பிக் கொடுத்துவிடு
நீ என் மனதில் ஆறாத காயங்களாக
இன்று வேதனை தருகிறாய் எதற்காக
உன்னை நான் அளவுக்கு அதிகமாய்
நேசித்தது தானோ எனது குற்றம்
காதலென்னும் முள் கீறிய புண்களால்
என் இதயத்தில் அழியாத வடுக்களாக நீ
உன்னுள் எங்காவது நான் இருப்பேன் என்று
எண்ணி நான் தொலைந்தது தான் மிச்சம்
விழிகளில் வடியும் ஒவ்வொரு துளிகளிலும்
உன் முகம் தான் தெரிகிறது காரணம் நீ என்பதால்
அவன் நினைவின்றி வாழத் துடிக்கிறேன்
பாழாய்ப் போன மனம் மட்டும் வரமறுக்கிறதே
ஒரு இதயத்தை காயப்படுத்திய பின்பும்
உன்னால் இதயமுள்ளவனாக வாழ முடிகிறதா
காதலே நீ கலைந்து போகு முன் காதல்
என்னவென்பதை அவனுக்கு சொல்லிப் போ
திருமணம் வேண்டாம் இரு மனங்கள்
சேராத இந்த திருமணமே வேண்டாம்
ஓரு மகளாய் என் தாய் மடி சாய்ந்து என் வாழ்வின்
இன்னல்களை எண்ணி அழுது தீர்க்க விரும்புகிறேன்
Entry Filed under: Uncategorized
Leave a Reply
Trackback this post | Subscribe to comments via RSS Feed






