Archive for October 2010
நினைவெல்லாம் நீ..!

மறக்க முயலும் போதுதான்
உயிர்ப்பிக்கின்றன.
Add a comment October 8, 2010
இன்று வரை விடை தெரியாது….
தனிமையிலும் மலர்ந்து சிரிக்கிறேன்;
தேடி வரும் உறவுகளை உதறி எறிகிறேன்;
தோள் சாய இடமின்றி தவித்தும் நிற்கிறேன்;
மலையினில் மோதியும் எழுந்து நிற்கிறேன்;
பூக்களில் தடுக்கியும் தோற்று விழுகிறேன்;
முழுமதியை வியந்து பார்க்கிறேன்;
தெருவோர குழந்தையையும் ரசித்து சிலிர்க்கிறேன்;
கவிதைகள் கொண்டு கவலை மறக்கிறேன்;
எழுத்துக்கள் கொண்டு ஞானம் வளர்க்கிறேன்;
அலைகடல் அழகினை வியந்து பார்க்கிறேன்;
அமாவாசை இரவினையும் மனதூர ரசிக்கிறேன்;
இயலாமை கொன்று ஜெயிக்க துடிக்கிறேன்;
வலிகளை விற்று பாடம் கற்கிறேன்;
இழவு வீட்டின் ஒப்பாரியினை எளிதாய் கடந்திருக்கிறேன்;
மழழையின் அழுகையில் கசிந்திருகி பல நாள்
தூக்கம் தொலைத்து தவித்திருக்கிறேன்;
இரவினில் போர்வைக்குள் விம்மியிருக்கிறேன்;
மறுநாளே மேடையில் இடியென முழங்கியும் இருக்கிறேன்;
இதோ… இன்று வரை விடை தெரியாது
என்னுள் எதிரொலிக்கும் முழுநீள கேள்வியாய்
நான் யார்…??
Add a comment October 8, 2010
உனக்காக தோன்றிய கவிதை…
![]()
உனக்காக தோன்றிய கவிதை
என் மனதோடு விதை போட்ட கவிதை,,,,
என் நினைவோடு துளிர்விட்ட கவிதை,,,,,
இருந்தும் எழுத இயலவில்லை
என் விரல் கொண்ட பேனாவுக்கு ,,,,,
பேனாவின் நுனியினில் வடிவம் பெரும்
எழுத்துகள் போலே,,,
என் மனதோடு உரு பெரும் உன் கவிதை,,,.,
இருந்தாலும் எழுத மனமில்லை…..
எண்ணங்களில் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை,,,,,,,
வெள்ளை ஏடுகளில் எழுதி
கவிதையை முடிக்க மனமில்லை,,,,,
தினம் தினம் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை
இருந்தும் எழுத மனமில்லை…….
மீண்டும் விழி சாய்கிறேன்
எழுதாத உன் கவிதைகளின்
நினைவுகளோடே,,,,,,,,,,,
Add a comment October 7, 2010
காதல் கவி நீ…!

எனக்குள் நிறைந்து
வழிகிறாய்-நீ
தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை
————————-
காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை
————————
நீ நல்லவளே இல்லை
பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்
———————–
உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது
தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று
Add a comment October 7, 2010






