Archive for October 7th, 2010
உனக்காக தோன்றிய கவிதை…
![]()
உனக்காக தோன்றிய கவிதை
என் மனதோடு விதை போட்ட கவிதை,,,,
என் நினைவோடு துளிர்விட்ட கவிதை,,,,,
இருந்தும் எழுத இயலவில்லை
என் விரல் கொண்ட பேனாவுக்கு ,,,,,
பேனாவின் நுனியினில் வடிவம் பெரும்
எழுத்துகள் போலே,,,
என் மனதோடு உரு பெரும் உன் கவிதை,,,.,
இருந்தாலும் எழுத மனமில்லை…..
எண்ணங்களில் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை,,,,,,,
வெள்ளை ஏடுகளில் எழுதி
கவிதையை முடிக்க மனமில்லை,,,,,
தினம் தினம் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை
இருந்தும் எழுத மனமில்லை…….
மீண்டும் விழி சாய்கிறேன்
எழுதாத உன் கவிதைகளின்
நினைவுகளோடே,,,,,,,,,,,
Add a comment October 7, 2010
காதல் கவி நீ…!

எனக்குள் நிறைந்து
வழிகிறாய்-நீ
தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை
————————-
காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை
————————
நீ நல்லவளே இல்லை
பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்
———————–
உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது
தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று
Add a comment October 7, 2010






