Archive for October 8th, 2010
நினைவெல்லாம் நீ..!

மறக்க முயலும் போதுதான்
உயிர்ப்பிக்கின்றன.
Add a comment October 8, 2010
இன்று வரை விடை தெரியாது….
தனிமையிலும் மலர்ந்து சிரிக்கிறேன்;
தேடி வரும் உறவுகளை உதறி எறிகிறேன்;
தோள் சாய இடமின்றி தவித்தும் நிற்கிறேன்;
மலையினில் மோதியும் எழுந்து நிற்கிறேன்;
பூக்களில் தடுக்கியும் தோற்று விழுகிறேன்;
முழுமதியை வியந்து பார்க்கிறேன்;
தெருவோர குழந்தையையும் ரசித்து சிலிர்க்கிறேன்;
கவிதைகள் கொண்டு கவலை மறக்கிறேன்;
எழுத்துக்கள் கொண்டு ஞானம் வளர்க்கிறேன்;
அலைகடல் அழகினை வியந்து பார்க்கிறேன்;
அமாவாசை இரவினையும் மனதூர ரசிக்கிறேன்;
இயலாமை கொன்று ஜெயிக்க துடிக்கிறேன்;
வலிகளை விற்று பாடம் கற்கிறேன்;
இழவு வீட்டின் ஒப்பாரியினை எளிதாய் கடந்திருக்கிறேன்;
மழழையின் அழுகையில் கசிந்திருகி பல நாள்
தூக்கம் தொலைத்து தவித்திருக்கிறேன்;
இரவினில் போர்வைக்குள் விம்மியிருக்கிறேன்;
மறுநாளே மேடையில் இடியென முழங்கியும் இருக்கிறேன்;
இதோ… இன்று வரை விடை தெரியாது
என்னுள் எதிரொலிக்கும் முழுநீள கேள்வியாய்
நான் யார்…??
Add a comment October 8, 2010






