இன்று வரை விடை தெரியாது….

October 8, 2010 muhiloosai kavioosai

தலையணையில் கண்ணீர் புதைக்கிறேன்;
தனிமையிலும் மலர்ந்து சிரிக்கிறேன்;

தேடி வரும் உறவுகளை உதறி எறிகிறேன்;
தோள் சாய இடமின்றி தவித்தும் நிற்கிறேன்;

மலையினில் மோதியும் எழுந்து நிற்கிறேன்;
பூக்களில் தடுக்கியும் தோற்று விழுகிறேன்;

முழுமதியை வியந்து பார்க்கிறேன்;
தெருவோர குழந்தையையும் ரசித்து சிலிர்க்கிறேன்;

கவிதைகள் கொண்டு கவலை மறக்கிறேன்;
எழுத்துக்கள் கொண்டு ஞானம் வளர்க்கிறேன்;

அலைகடல் அழகினை வியந்து பார்க்கிறேன்;
அமாவாசை இரவினையும் மனதூர ரசிக்கிறேன்;

இயலாமை கொன்று ஜெயிக்க துடிக்கிறேன்;
வலிகளை விற்று பாடம் கற்கிறேன்;

இழவு வீட்டின் ஒப்பாரியினை எளிதாய் கடந்திருக்கிறேன்;
மழழையின் அழுகையில் கசிந்திருகி பல நாள்
தூக்கம் தொலைத்து தவித்திருக்கிறேன்;

இரவினில் போர்வைக்குள் விம்மியிருக்கிறேன்;
மறுநாளே மேடையில் இடியென முழங்கியும் இருக்கிறேன்;

இதோ… இன்று வரை விடை தெரியாது
என்னுள் எதிரொலிக்கும் முழுநீள கேள்வியாய்
நான் யார்…??

Entry Filed under: Uncategorized

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Calendar

October 2010
M T W T F S S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

காதல் தாகம்

Our Services

Advertisment

Watch DVD Movies Online
 
Follow

Get every new post delivered to your Inbox.